Wednesday, July 13, 2011

மகாலட்சுமி

என்றும் போல் அன்றும் உச்சி வெயில் கொதிக்க மதுரை நகரமே அனல் பறக்க, திருச்சியிலிருந்து வந்த பேருந்து ஒரு பெரிய குடும்பத்தை இரக்க நம் பயணத்தை துடங்குவோம். வயதானாலும் காதல் மாறாத ஒரு இளம் ஜோடி (இவர் தான் பெற்றோர் போலும்) , இளமை புதிக்கும் தம்பதியர்களின் (இது அக்காவா இருக்கும்) கையில் சுட்டி செய்யும் இரு குழந்தைகள் (அக்கா பசங்களா இருக்குமோ), மற்றும் எந்த கூட்டத்திலும் கண்டு பிடிக்கும் அளவுக்கு பளிச்சென்று வெள்ளை சட்டையும் இருளை அழிக்கும் விழிகளை இருளால் மறைத்திருக்கும் அழகான இளைஞன் (இவர் அவரே தான் – மாப்பிளை சார் ).. அக்குழந்தையின் தந்தை தன கையிலிருந்த கைபேசி எடுத்து எனக்கு அழைப்பு விடுத்தார்.. நாம் அங்கு சென்று அவர்களை வரவேர்த்து நாம் கொண்டிருந்த வண்டியில் மஹா வீட்டுக்கு சென்றோம்..

ஆம் , மஹா – என் மனைவியின் சகோதரி..நாங்கள் அவர்களின் பக்கத்து வீட்டில் குடியிருக்கிறோம்.. நான் இது வரை எத்தனையோ பெண்களை பார்த்ததுண்டு ஆனாலும் மஹா வை போல் ஒரு பெண்ணை கண்டெடுக்க எத்தனை ஜென்மம் தான் காத்திருப்பேனோ.. அவர்கள் குடும்பம் சாதாரணமான நடுத்தர குடும்பம் தான்.. அவளும் ரொம்ப சாதரணமா வளர்ந்த பொண்ணு..அன்பும் பண்பும் நிறைந்த குடும்பத்தின் வறுமையினால் அவளின் படிப்பை கூட எளிமையாக முடித்துக்கொண்டாள்(BA).. அவளுக்கு நண்பர்கள்னு கூட யாருமில்லா.. அன்பு காட்டா அவளை மிஞ்ச எவராலும் முடியாது.. அவளுக்கு எல்லாமே அவள் அம்மா,அப்பா, தங்கை, தம்பி.. இவர்களை தவிர வேறு உலகம் அவளுக்கு கிடையாது.. என்ன துயரம் வந்தாலும் அமைதியாக தைரியமாக பேசுவாள்.. அவளுக்குள்ளே இருக்கும் சுட்டி தனம் அவள் தங்கை தம்பியிடம் மட்டுமே வெளி வரும்.. அவள் பாடும் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.. கண்மை இட்ட கண்கள் ஆயிரம் காந்தம் ஈர்க்கும் சக்தி கொண்டது… பெயரில் மட்டும் மகாலட்சுமி அல்லாமல் குனத்தாளையும், ஐஸ்வர்யத்தாளையும் மகாலக்ஷ்மியை போல் விளங்குகிறாள்… இது அனைத்தும் என் மனைவி என்னிடம் சொல்லி நான் தெரிந்து கொண்டது.. ஒரு பெண் இன்னொரு பெண்ணை பற்றி எளிதாக பாராட்ட மாட்டார்கள், அனால் அப்பெருமைக்கு எந்த விதத்திலும் குறையவில்லை மஹா..

இறைவன் நல்லவர்களை மட்டும் தான் அதிகமாய் சோதிப்பான் அவர்களுக்கு சிறந்த பரிசை கொடுப்பதற்கு .. அவ்வழியில் மஹா இறைவனின் செல்ல பிள்ளை.. நானும் மாதம் இரண்டு மூன்று மாப்பிளை வீட்டாரை அழைத்து வந்திருக்கிறேன், அவளை பிடித்து போகும் அவர்களுக்கு அவளின் ஏழ்மையை பிடிப்பதில்லை.. வந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லிவிட்டு விளைகின்றார்கள்.. எத்தனை தடை வந்தாலும் ஆண்டவன் போடும் முடித்ததை யாராலும் மாற்ற முடியாது.. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று , என்ற கவிதை இவள் வாழ்க்கையில் இன்று முடிவாகவேண்டும் என்றும் ஆண்டவனை பிரார்த்தித்து அவர்களை அழைக்க சென்றேன்.. நான் மனம் முடித்ததிலிருந்து இன்று வரை என் மனைவியின் விழிகளை நீர் பார்த்ததில்லை, அதற்காக எங்க வீட்டில் வெங்காயம் கூட நான் தான் வெட்டுவேன்..அனால் சென்ற வாரம் அவள் என் மடி சாய்ந்து ஏங்கி அழுதாள், மஹா வை பார்த்து பரிதாபத்தோடு… அன்று காலை மகாவை ஒரு பெண் பார்க்க ஒரு குடும்பம் வந்துவிட்டு வரலக்ஷ்மியின் வருகைக்கே வரதட்சனை கேட்டு அது கொடுக்க முடியாமல் வரதலட்சுமி என்று சென்று விட்டார்கள்.. அன்று மஹா என் மனைவியிடம் என்றும் போல் இல்லாமல் சோர்ந்து போய் மனம் விட்டு அழுதிருக்கால்.. வாழ்வின் முடிவுக்கு கூட சென்று விடலாம் என்று அவளை னியாநிக்கா தூண்டிருக்கிறது அக்கசப்பான நிகழ்வுகள்..

அனைத்தையும் நினைத்து முடிப்பதற்குள் வீடு வந்தடைந்தோம்.. மகாவின் அன்னையும் தந்தையும் அவர்களை வரவேற்று வீட்டினுள் சென்றார்கள்.. அனைவருக்கும் உட்கார தரையில் பாய் விருத்தி வைக்க பட்டது.. அவர்கள் வாங்கி வந்த பூ பழங்களை ஒரு தாம்புலத்தில் வைத்து அமர்ந்தார்கள்.. நாமும் அவர்களின் அருகில் அமர்தோம்.. அவர்களின் இரு குடும்பத்தார் பற்றி பரஸ்பரமாக பேச துடங்கினார்.. சிறு நேரம் பொறுத்து மகாவின் தந்தை மகாவை அழைத்து வர சொல்லி அவளின் தங்கையிடம் கூறினார்.. சற்றும் நேரம் தாமதிக்காமல் மாப்பிள்ளை வேண்டாம் என்று கூற எல்லோரும் அமைதியானார்கள்.. சற்றே சிரித்த படி இபோ வேண்டாம், நீங்க எல்லாம் பேசி முடிங்க, எல்லார்க்கும் எல்லாமே ஒத்துபோசின அப்பறம் அவர்களை பார்கிறேன் என்று கூறினார்.. மகாவின் வீட்டில் எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள், நான் உட்பட.. “சரி” என்று மாப்பிளையின் தாய் ஆரம்பித்து தொடர்ந்து-“ என்ன செய்வீங்க உங்க பொண்ணுக்கு” என்று கேட்க, மறுபடியும் மாப்பிளை குறுக்கே தலையீட்டு, “ நீங்க என்னமா செய்ய போறீங்க அவங்க பொண்ணுக்கு, எல்லாமே விசாரிச்சிட்டு தானே வந்தோம், இப்படி ஒரு குணவதி உனக்கு மகளாய் கிடைக்க நீ தான் அவங்களுக்கு செய்யணும்” என்று சொல்ல, அவர் தாய் புன்னகைத்தார்.. “ அவன் இப்படி தாங்க அவன் மனைவியின் வீட்டில் இருந்து ஏதும் எதிர் பாக்க கூடாது சொல்லிடு இருப்பன், ஏதோ விளையாட்டுக்கு சொல்றான்னு நினைச்சேன்,ஆனா இப்போ பெருமையா இருக்கு.. “ நாம் குறிக்கிட்டு அப்பறம் ஏன்னா இப்போவாது பொண்ண பார்க்கலாமா என்று மாப்பிளையிடம் கேட்க, ஆண்களுக்கே உண்டான வெளிகாட்டதா நாணத்துடன் சிரித்தார்..என் மனைவியிடம் சொல்லி அழைத்து வர சொன்னேன்.. எல்லோரையும் வணங்கி அருகில் அமர்ந்தால், மாபில்லையிடம் பேச விரும்புறீங்கள என்று கேட்க, அவர் தலை அசைத்தார்.. இருவரும் சிறு நேரம் மனம்விட்டு பேசி வந்தார்கள் .. இவர்களுக்கும் ரொம்ப பிடித்து போகா, இரு வீட்டாரும் அன்றே ஒரு நல்ல தேதியை குறித்து விட்டு, வரும் கார்த்திகை மாதத்தில் திருமணம் முடிவாக்கிவிட்டு சென்றார்கள்..

இத்தனை தடைகள் ஏநேனா எனக்கு அன்று தான் புரிந்தது.. ஆண்டவன் நமக்கு ஒரு தடை விதிக்கிறான் என்றால் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும், அவன் நமக்கு எது தரவேண்டுமோ அதை கண்டிப்பாக தருவான் என்று புரிந்து கொண்டேன்.. இதுவரை மகாவிடம் கண்டிடாதா பூரிப்பையும் கண்டேன், அதில் இறைவனின் அன்பைக்கண்டேன்.. எனக்கு தெரிந்த ஒரு மகாவின் வாழ்கை இறைவன் அருளால் நன்றாக முடிவானது, இறைவன் போட்ட முடித்ததை போட மாப்பிளை கிடைத்து விட்டார்..அனால் மகாவை போல் பல பெண்களுக்கு இத்துன்பம் தோன்றும்..திருமணம் வயதானால் எல்லா பெண்களுக்கும் திருமண ஆசை வருவது இயற்கை அதற்கு மாறாக நாம் ஏதும் செய்ய இயலாது.. பெண் என்ன பொருள் காட்சியா வாரம் ஒருவர் வந்து பார்த்துவிட்டு போவதற்கு, இந்த நிலமுறை என்று தான் மாறும்.. பெண்களுக்கும் ஒரு உணர்வு உண்டு அதை ஏன் மதிக்க மறுக்கிறார்கள்.. பெண் பார்ப்பது தப்பில்லை, ஆனால் பார்க்க வரும் முன் அவர்களின் புகைப்படம் பார்த்து, ஜாதகம் பார்த்து, வசதி வாய்பை பார்த்து விருப்பம் இருந்தா வீட்டின் பெரியவர்கள் பார்த்து பெசியப்பின் பெண்ணும் பையனையும் பார்த்துக்கொள்ளலாமே.. அதை விட்டு விட்டு ஒரு பெண் அவனை பிடித்துக்கொண்டு மனக்கோட்டை கேட்டிவிட்டு, ஒரு சில காரணத்தால் அதை உடைப்பது செரியா.. இன்னும் எத்தனை நாள் தான் ஆண்கள் பெண்களிடம் விலை போக போகிறார்களோ.. ஆண்களே நீ வரதட்சனை வாங்கும் ஒவ்வொரு பைசாவும் உனக்கு நீ பேசும் விலை.. உன்னை நீ விற்பதற்காக நீ பேசும் விலை தான் வரதட்சனை.. உன்னை அன்பாகவும், உன் குழந்தையும் குடும்பத்தை சுமக்க போகும் உன் இரண்டாவது தாயை மனம் முடிக்கா நீ அல்லவா அவளுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.. எத்தனை சட்டம் வந்தாலும் நீங்கள் வாங்கப்போவதை யாரும் தடுக்க மாட்டார்கள்.. உன்னை நீயே தாழ்த்தி கொண்டு வாழ வக்கேடுத்தவன் என்று உனக்கு தோன்றினால் நீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிகொள், அனால் நீ இந்த போஒமியிளிருந்து செல்லும் பொது அந்த வரதட்சனி உனக்காக கண்ணீர் விடாது, அதனுடன் நீ அழைத்து வந்த மனைவி தான் கண்ணீர் விடுவாள், உனக்காக அவள் வாழ்கையே தியாகம் செய்யும் பொது நீ அவளுக்காக இதை தியாகம் செய்ய உனக்கு ஏன் தயக்கம்.. மாற்றம் ஒன்றே மாற்றாதது நாம் மாறலாம்..

மீண்டும் ஓர் நற்சந்தற்பத்தில் சந்திக்கும் வரை என்றும் ப்ரியமுடன்

அருண்.K.நட்ராஜ்

3 comments:

ரேவா said...
This comment has been removed by the author.
ரேவா said...

பதிவு மிகவும் அருமை நண்பா ...ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழகாய் படமெடுத்து கட்டியது உன் பதிவு....தொடர்ந்து எழுது...வாழ்த்துக்கள்(ஹி ஹி )

அருண் K நடராஜ் said...

ungal adhaaravu en ezhuthukkal :)

Post a Comment