நேற்று வரை நீ யாரோ நான் யாரோ .. நீ விட்டா மூச்சு காற்றை ஏதோ ஒரு ஜீவன் இங்கு சுவாசிக்க .. இன்று உன் சுவாசமே இல்லாமல் போனதை அறியவோ மூன்று வாரங்கள் ஆயிற்று .. நீ விட்ட மூச்சி காற்று இன்று எங்களின் கண்ணீராய் வெளிவருகின்றன ... இதுவரை நான் அறிந்த உன் கதையை ஊர் அறிய இன்று நான் கூறி உன் உயிருக்கான இழப்பை ஈடுகேட்ட முடியாவிட்டாலும் , உன் போல் பல ஏமாளிகள் இவ்வுலகில் உள்ளதால் , அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாய் இருக்கட்டும் ... நீ வாழும் காலத்தில் என்னை எழுத சொல்லி கேட்டுக்கொண்டு என் தோழியின் ஆசை நீ சென்ற பின் தான் நிறைவேறியிருக்கிறது. என்னை மன்னித்துவிடு தோழமையே..
இக்கதை என் தோழியின் தோழமைக்கு சமர்ப்பணம் ..
அவள் கல்லூரியின் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தன் தாய்க்கு உதவியாய் வேலை பார்த்து கொண்டிருந்தாள் , மதியம் உணவு அருந்திவிட்டு சிறு தூக்கம் போட கண் அசைக்கும் முன் அவளை விழிக்க வைத்தது தபால் காரனின் கதவை தட்டும் சத்தம் .. அவளுக்கு வந்த முதல் கடிதம் , ஆவலுடன் திறந்து பார்த்தாள் .. சென்னை ஒரு IT கம்பெனியில் வேலை வாய்ப்புக்கான உத்தரவு கடிதம் ..தன் தம்பிகளின் படிப்பிற்கும் , தன் குடும்ப வறுமையை சீர் செய்ய அவளுக்கும் வேறு வழியில்ல , அவள் பெற்றோர்களுக்கும் அவளை முழு மனதுடன் வேலைக்கு அனுப்ப மனமில்லாமல் அனுப்பி வைத்தார்கள் . . . தன் வாழ்வில் முதல் முறையாக மதுரையை விட்டு தன் குடும்பத்தை பிரிந்து புறப்படும் சுஜாவுக்கோ (சுஜாதா - பெயர் மாற்றப்பட்டது ) மனசுக்குள் ஆயிரம் சஞ்சலங்கள் . தன் தோழிகள் சென்னையில் வேலை பார்திடிருப்பது அவளுக்கு ஒரு விதமான நம்பிக்கை கொடுத்தாலும் , தனிமையை நினைத்து மிகவும் வருந்தி கொண்டிருந்தாள் .. அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் , ஆயிரம் சிந்தனைகள் மனதில் ஓடிகொண்டிருக்க அவள் சென்னை வந்தடைந்தாள் .. ஒரு பக்கம் 10 மணிநேர வேலை அவளை வாட்டா இன்னொரு பக்கம் அவளுக்கோ தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது .. தோழிகள் கூடவிருந்தும் அவளால் தனிமையை விட்டு பிரிய மனமில்லாமல் தனிமையை கூடவே வாழ பிரியப்பட்டவளுக்காக வந்தமைன்தது ஒரு இணைய நட்பு - மாதவன் .. ஆரம்பத்தில் பெரும் தயக்கத்துடன் தொடங்கிய நட்பு நாளிடைவில் அவன் நகைப்பும் அன்பான பேச்சும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவளின் தனிமையை பிரித்து அவனுடன் இணைய வைத்தது .. இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதில் போட்டியிட்டு கொண்டு காதலிக்க ஆரம்பித்தனர் ... அவர்கள் காதல் மூன்று ஆண்டு வளர்த்து , நான்காமாண்டின் துவக்கத்தில் அவன் அவளை கொஞ்சம் விட்டு விலக ஆரம்பித்தான் .. மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் தனிமையை அவளை வாட்ட தொடங்கின , அவளின் வெகுளிதனமானா கேள்விகளுக்கோ அவன் விடை தர வெகு நாட்கள் மறுத்து கொண்டு வந்தான் .. ஒரு மாதம் இடைவேளை அவளுக்கோ ஒரு யுகம் போல் தோன்றிய நரகமான நேரத்தில் அவளை வானுக்கும் மண்ணுக்கும் குதிக்க வைத்தது அவனின் தொலைபேசி அழைப்பு , அவளை நேரில் காண வேண்டும் என்று சொல்ல அவளின் கண்ணில் நீர் வீழ்ச்சி கொட்டியது ..
அமைதியான அப்பூங்காவின் மௌனத்தை உடைத்த இருவரின் சிரிப்பும் வெகு நேரம் நிலைக்கவில்லை , அவளின் கேள்விகளுக்கு பதில் ஒவ்வொன்றாக வந்தது ... இதுவரை அவளின் கண்ணீர் துடைத்து கொண்டிருந்தவன் , இன்று அவனை பற்றி கூறி அவளின் கண்ணீருக்கே காரணமானான் ... காதலும் கண்ணீரும் இணை பிரியா நண்பர்கள் , என்றும் ஒருவருக்கொரு விட்டுகொடுத்தே வாழ்வார்கள் ... இன்று இவளின் கண்ணீருக்கு காரணம் அவனின் காதல் .. ஆம், பத்து ஆண்டுக்கு முன் அவனின் காதல் கதை தான் அவளின் கண்ணீருக்கான காரணம் .. மாதவன் தன் கல்லூரி படிப்பின் போதே ஒரு பெண்ணை காதலித்து , தன் வீட்டின் சம்மதத்துடன் ஊரறிய மனைவியாக்கிகொண்டவன் , 8 வயதில் சிறுவனுக்கு தந்தை என்னும் அந்தஸ்து கூட அவனுக்கு உள்ளது .. மூன்றாண்டு காலமாக அவன் மனைவியால் பெரும் சிறு சிறு சண்டைகளுக்கான மருந்தாய் அவனுக்கு பயன் பட்டவள் தான் சுஜா ... அவனின் சுய இன்பத்துக்காக பலிகாடானது அவளின் கண்மூடித்தனமான அன்பும் காதலும் .. ஒரு கதையை சொல்லி முடிக்கும்முன் அவளின் காதலை தொடருமலவுக்கு இன்னொரு கதையை உருவாக்கினான் , தன் மனைவியை பற்றி அவதூறாக பேசி அவளிடமிருந்து விவாகரத்து வாங்க போவாதாக கூறினான் , மேலும் அவளின் அனுதாபங்களை சம்பாதிக்கா தன் 8 வயது மகனை பற்றியும் பேசவும் , சுஜாவுக்கு அவன் மீதிருந்த கோவம் தணிந்து மீண்டும் அன்பை அர்ச்சிக்க ஆரம்பித்தாள் .. மீண்டும் காதலை வளர்த்தாள் , அவளால் கொடுத்த அன்பை குறைக்க மனமில்லை , அது வளர்ந்து கொண்டே தான் போனது .. அவனுக்கும் தான் மனைவியிடம் விவாகரத்து கிடைக்கும் தருணமும் வந்தது .. துன்பமும் ஒருவரை துரத்தினால் துரத்தி கொண்டே இருக்கும் , உண்மைக்கு எந்தக்காலமும் ஞாயம் கிடைக்காதுதுக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டானது சுஜாவின் அன்பு , இக்கணம் அவளின் அன்பு பணத்தால் வெல்லப்பட்டது ... மாதவனுக்கும் சுஜாவுக்கும் திருமணம் எதிர்பார்ப்புகள் அவளின் மனதில் ஒரு பக்கம் குதூகலமாகக அவனோ வேறு ஒரு வாழ்க்கையை அவனுக்கு அமைக்க முடிவெடுத்து விட்டான் .. ஒரு விவாகரத்தானா பணக்கார பெண் அவனுக்கு வாழ்வு கொடுக்க சம்மதித்தால் , அவன் சுஜாவை மறுத்துவிட்டான் .. சுஜா வாழ்க்கையை வெறுத்து மீண்டும் அவள் குடும்பத்துடன் இணைந்தாள் .. அதோடு விடாதா மாதவன் , சுஜாவின் அன்புக்கு மீண்டும் ஆசை பட்டு அவளை தொலைபேசியில் அழைக்க ஆரம்பித்தான் ,.. அவளோ அவனை வெறுக்க ஆரம்பிக்க , சுஜாவின் உண்மையான அன்புக்கு கிடைத்தது அவனின் கொச்சையான வார்த்தைகளும் ஏமாற்றமும் மட்டுமே . . . அவனுக்கு கடந்த june 8 ஆம் தேதி அந்த பணக்கார பெண்ணை திருமணம் நடந்து முடிந்தது ..மறுமுனை சுஜாவோ உண்மையான அன்பை மதிக்காதா இவ்வுலகத்தில் எனக்கு மட்டும் இடம் எதற்கு என்று தன்னை மாய்த்துக்கொண்டாள் .. அவளின் மூச்சு நின்று போய் மூன்று வாரம் பொறுத்தே அவளின் துயரம் அனைத்தும் அறிந்த அவளின் மூச்சாய் இருந்த என் தோழிக்கு அறியவந்தது ..
இது ஒரு உண்மையான கதை மட்டுமல்ல , ஒரு எச்சரிக்கையும் கூட ... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் .. அன்பு காட்டுங்கள் , அதுக்கு தகுதியானவங்கலானு பாத்துட்டு அப்பறம் அன்பு காட்டுங்கா .. இல்லனா காட்டுகின்ற அன்புக்கு எதையும் எதிர்பாக்காதீங்கா .. இணைய நட்பு என்பது ஒரு பெரிய வரம் தான் , ஆனால் அதை துஷ்ப்ரயோகம் பண்ணும் நாசகிருமிகள் இருக்கும்வரை அது ஒரு ஆபத்தான பகுதியே .. உண்மை எல்லாரிடத்திலும் இருப்பதில்லை , உண்மையென்று தெரிந்த பின்பே உங்கள் உண்மையான அன்பை காட்டுங்கள் .. காதல் ஒரு சுகமான அனுபவம் ,உணர்ச்சி, அதை உங்கள் சுய இன்பத்துக்காகவும் காம வெறிக்காகவும் அதை கவர்ச்சியாக்கி கொச்சை படுத்தாதீர்கள் .. இது ஒரு பெண்ணின் கதை , இது தெரிந்தது , ஆனால் இதே போல் நமக்குள் , நம்மை சுற்றி இருக்கும் நம் தோழிக்கோ , இல்லை நம் நண்பர்களின் தோழிக்கோ கூட நேரிடலாம் , சுயநலம் படைத்த இவ்வுலகல வாழ்வில் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் தான் வாழ வேண்டும் .. இன்று ஒரு சுஜா நம்மை விட்டு பிரிந்து விட்டாள், ஆனால் இன்னும் எவ்வளவோ மாதவன்கள் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ... பெண்கள் ஒன்றும் பொம்மையல்ல ,உங்கள் அடிமையுமல்ல அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு , அவர்களின் உணர்ச்சிகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் .. ஒரு மாதவனால் இழந்தது எத்தனை பேருடைய சந்தோஷம் - அவன் மனைவி ,மகன் ,புது பணக்கார மனைவி ,சுஜாவின் பெற்றோர்கள் , சுஜா ,அவளின் தோழி , என் தோழியின் மூலமாக நான் , என்னிடமிருந்து நீங்கள் ... மீண்டும் எச்சரிக்கிறேன்..
காதல் உண்மையானது , புனிதமானது , அதை காமத்துடன் ஒப்பிட்டு அதை கொச்சை படுத்தாதீர்கள் ..
உங்கள் காம பசியை தீர்க்க எவ்வளவோ வழியுண்டு காதலை பயன் படுத்தாதீர்கள் .. :'(
பெண்களே உங்களின் அன்புக்கு ஈடா இவ்வுலகத்தில் யாரும் அன்பு செலுத்த முடியாது, ஒரு ஆணின் மேல் அன்பும் காதலும் வைப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசியிங்கள் , எத்தனை காலம் வேணுனாலும் எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் பிறக்கும் பொது தனியாக பிறக்கவில்லை உங்களுக்காக உங்கள் பெற்றோர்கள் எப்பொழுதும் உங்கள் கூடவே உள்ளார்கள். ஒரு சில நயவஞ்சகர்களால் உங்களின் முடிவு உங்களை சார்ந்த அனைவரையும் பாதிக்கின்றது.
காதல் செய்யும் அனைவருக்கும் உங்கள் காதலில் எந்த பிரெச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள், பேசி தீராதது ஒன்றும்மில்லை, பிரிவு ஒரு முடிவுமில்லை. ஆண்னென்ன பென்னேன்னா ஒரு முறை அன்பு காட்டினால் அதை மாட்டரா முடியாது இதுவே உலகின் நியதி..
மீண்டும் ஒரு நல்லதோர் சந்தர்ப்பத்தில் சந்திக்கும் வரை ..
என்றும் ப்ரியமுடன்
அருண்.K.நட்ராஜ் :(
இக்கதையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
1 comments:
தில் யாரும் அன்பு செலுத்த முடியாது, ஒரு ஆணின் மேல் அன்பும் காதலும் வைப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசியிங்கள் , எத்தனை காலம் வேணுனாலும் எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் பிறக்கும் பொது தனியாக பிறக்கவில்லை உங்களுக்காக உங்கள் பெற்றோர்கள் எப்பொழுதும் உங்கள் கூடவே உள்ளார்கள். ஒரு சில நயவஞ்சகர்களால் உங்களின் முடிவு உங்களை சார்ந்த அனைவரையும் பாதிக்கின்றது.
காதல் செய்யும் அனைவருக்கும் உங்கள் காதலில் எந்த பிரெச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள், பேசி தீராதது ஒன்றும்மில்லை, பிரிவு ஒரு முடிவுமில்லை. ஆண்னென்ன பென்னேன்னா ஒரு முறை அன்பு காட்டினால் அதை மாட்டரா முடியாது இதுவே உலகின் நியதி.
enna sollurathunu theriylaa:-(
Post a Comment