Sunday, April 17, 2011

என் கிறுக்கள்கல்

****
காற்றைப்போல் நீ வந்ததும் தெரியவில்லை போனதும் புரியவில்லை
எதற்காக நீ வந்தாயோ அதை நினைத்து இனி எனக்கு தூக்கமும் இல்லை...

****
மன்னிக்காதே !! நான் உன்னை நேசித்ததிற்கு ...
மறவாதே !! நீ என்னை நேசித்ததற்கு...

****
உன் மௌனம் என்னை பேசவைத்தது
உன் புன்னகை என்னை மலரவைத்தது
உன் அன்பு என்னை நேசிக்கவைத்தது
உன் காதல் என்னை மறக்கவைத்து....

****
தோழியே...
என் கண் பார்க்க ஒரு தோழி வந்தால், நான் பார்ப்பதற்குள் மறைந்துவிட்டால்.
என் தோழ் சாய ஒரு தோழி வந்தால் ,நான் சாய்வதர்க்குல் மறைந்துவிட்டால்.
என் மௌனத்தை உடைக்க ஒரு தோழி வந்தால்,நான் பேசுவதற்குள் மறைந்துவிட்டால்.
என் குறை தீர்க்க ஒரு தோழி வந்தால்,நான் தீர்க்கும்முன் மறைந்துவிட்டால்.
என் இதயத்தை பரிமாற ஒரு தோழி வந்தால், நான் தரும்முன் மறைந்துவிட்டால்.
என்னை ரசிக்க ஒரு தோழி வந்தால் , நான் ரசிப்பதற்குள் மறைந்துவிட்டால்.
என்னை புன்னகைக்க ஒரு தோழி வந்தால், நான் சிரிக்கும்முன் மறைந்துவிட்டால்.
நீ எங்கும் மறைந்து விடவில்லை என்னுள் குடி புகுர்ந்து விட்டாய்யடி தோழியே...
என்றும் என்னுள் நீ,உன்னால் நான்....

****
மேகமூட்டம் போல் உன் நினைவுகள் ,
அதனால் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் ...
என் கண்களில்....
என்றும் உன் நினைவுகளுடன் ...!!!!!

****
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்திரம் இல்லை....

****
பூத்து குலுங்கும் மலர்களை போல்தான் என் அன்பும் ,
பறிக்க பறிக்க பூத்துக்கொண்டேதான் இருக்கும்...

****
என் அன்பு காற்றைப்போல் உணர மட்டும் தான் முடியும்
ஆனால் யார் வேண்டுமானாலும் சுவசித்துக்கொள்ளலாம்

****
நான் எழுதிய முதல் கவிதை
என் அவளுக்கு இன்னும் பொய் சேரவில்லை

****
என்னவளுக்கு தெரியாது
என் முதல் கவிதை அவள் பெயர்தான் என்று...

****
எழுத்தாளர்கள் மாறலாம், எழுத்துக்கள் ஒன்றுதான் - காதல்....

****
உன்னை சந்தித்த முதல் நொடியே என் சிந்தனைகளை நான் மறந்துவிட்டேன்..

****
என்னவளே .. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் நினைவில் நீ தானடி ..இந்த ஜென்மமும் காத்திருக்கிறேன்.. உனக்காக..

****
என்னவள் பிறந்த பின் தான் அம்மாவாசை பிறந்ததோ என்று ஒரு சந்தேகம்..
அவளை பார்த்து வெட்கப்பட்டதோ அந்த நிலா..

****

எனவளுக்காக...
*உன்னை நான் கண்டபிறகே நான் கவிஞன் ஆனேன்...
*என்னவளுக்கான பொக்கிஷம் - என் காதல்

****

என் காதல் என்னை கவிதை எழுத தூண்டியது..
என் நட்பு என்னை கதை எழுத தூண்டியது..

*****

அன்பு காட்டும் நெஞ்சங்கள் எல்லாம் உன்னை காதலிப்பதாக அர்த்தம் இல்லை...

****
காதல் மோகத்தை வெள்ள முடிந்த எனக்கு நட்பின் அன்பை வெல்ல முடியவில்லை..

****

உன்னை நான் சந்திக்கும் முன் உன் தோழியை சந்தித்திருந்தால்..அவளையே காதலித்திருப்பேன்..

****

காதல் சுகமானதுதான் , அது காதலர்களை பொறுத்துதான்.
தோழனிடம் காதலால் தவிக்கும் தோழி சொன்ன வாக்கியம்..

****

இந்த உலகமே பார்த்து பொறாமை படும் என் காதலை நீ மட்டும் ஏன் வெறுக்கிறாய் ..

****

இத்தனை அழகாக உலகை படைத்த கடவுள் ஏன் எனக்கு பார்வை கொடுக்க மறந்துவிட்டார்.
- ஒரு பார்வையற்றவரின் ஏக்கம்..

*****

என் காதல் பரிசு என்னவளுக்காக- என் விழிகள்..
நான் இருந்தபின்னும் அவளை பார்த்த அந்த விழிகள் இவ்வுலகை என்றும் ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும்..

*****

காதலுக்கு சான்றிதழ் தேவையா என்றேன்...
இல்லை என் இதழே போதும் என்று என்னை மௌனம் ஆக்கினாய்

******

என் விழிகளுக்கு பொய் பேச தெரியாது.. அதனால் தான் என்னவோ உன்னை கண்டு முதல் நொடியே என்னிடம் சொன்னது நீ தான் என்னவள் என்று...